

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கொலை சம்பவம் நிகழ்ந்து 110 நாட்களாகியும் துப்பு துலங்காமல் போலீசார் திணறிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.