

கேரளாவில் இன்று விஷூ புத்தாண்டு திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய விஷு புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியும் அளிக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.