

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் உயிரிழந்தார்.
அவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் இரங்கல் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அவரின் மறைவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளப் பதிவில்.,
“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!
தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன.
தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.