மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்- முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட வீர வணக்கங்கள்.

* கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்த மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

* அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்றுசேரும்போது சாதி, மதம், இனம் அனைத்தும் உடைத்து நொறுங்கும். மதம், மொழி என அனைத்தும் உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம்.

* உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம்.

* லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.

* தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்.

* பொது வாழ்வில் சமரம் இருக்கக்கூடாது, மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் த.வெ.க. அரசு செயல்படுகிறது.

* அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டத்தை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம்.

* தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது.

* விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது.

* தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.

* அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, உலகளவில் வளர்ந்த நாட்டுக்கு இணையாக உயர்த்த உறுதியேற்போம்.

* அரசு அலுவலகம் தேடி வரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com