கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் 100% தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு

மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
Crop - CM Vijay
Published on

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

* மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

* ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 குறைந்தபட்சமாக ரூ.35,000 பணப்பயன் கிடைக்கும்.

* பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ரூ.5,932 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com