பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய எதிர்ப்புகள் எழுந்து வரும்நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!
Published on

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

முதலமைச்சர் அறிவிப்பு

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

நிலப்பரப்பு மற்றும் அமைவிடம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.

எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரணம் ஏற்கனவே இட நெரிசலை சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், இன்னும் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என வாதிடுகின்றனர்.

மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாதிடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com