சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரெயில்

புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
AC Electric train
Published on

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள இந்த ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக, அரசு தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வேலைக்கு வரவும் அவர்கள் பணி முடிந்து வீடு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு மின்சார ஏ.சி. ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கால அட்டவணை தயாரித்து வைத்து ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன. புறநகர் பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரக்கோணத்திற்கு விடப்பகிறது.

அரசு அலுவலக வேலை நேரத்தை கணக்கிட்டு இயக்கவும் அட்டவணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் ஏ.சி. மின்சார ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com