ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள்

7 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள்
Published on

ஏற்காடு:

ஏற்காடு அண்ணா பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர்கள் பூத்துக்குலுங்கும். 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு அவை மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும், பூங்கா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 7 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை துறை ஊழியர்கள் 1 லட்சம் மலர் நாற்றுகளை பூங்கா முழுவதிலும் நடவு செய்துள்ளனர்.

சீசன் நெருங்கிய நிலையில், தற்போது டேலியா செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பல வண்ணங்களில் டேலியா மலர்கள் உட்பட பல வகையான மலர்கள் பூத்துக்குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com