

இந்நிலையில் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குள் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டிய ஆய்வாளர்கள், தடுப்பூசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோசானது இறப்புக்கான வாய்ப்பை 80 சதவீதம் குறைப்பது தெரியவந்துள்ளது.