விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் செங்கோட்டையன்

விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஈரோடு:

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு இந்த அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. விளையாட்டுத்துறை மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார்.

விளையாட்டில் மாணவ-மாணவிகளை சிறுவயதிலிருந்தே ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்படும் பட்சத்தில் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்.

பாடத்திட்டங்கள் குறைப்பதை பொறுத்தவரை 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் உடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com