

கடலூர்:
கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது கடலூர் முதுநகர் அருகே பெரிய காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் சென்ற போது . அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென்று பஸ் மீது கற்கள் வீசி சரமாரியாக தாக்கினார்கள். இதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) வெங்கடேசன் (19) ஆகியோர் பஸ் மீது கற்கள் வீசியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.