மாநகராட்சி, நகராட்சி-பேரூராட்சி தேர்தல்: டி.டி.வி.தினகரன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.

இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com