அரியலூரில் கொரோனாவிற்கு முதியவர் பலி- மேலும் 4 பேருக்கு தொற்று

அரியலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரம்பலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலும், வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,644 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,563 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 343 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 379 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com