கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்- சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா தொற்று குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
Published on

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.

* தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

* கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்.

* கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு பயன்படும்.

* தொற்று அளவு, மக்கள் தொகையை கணக்கில் வைத்து தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஜூன் மாதம் இறுதிக்குள் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com