குழந்தைகளின் பாதுகாப்புக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு மற்றும் உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூர்த்தி செய்ய குழந்தைகள் நலக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.

இதுபோன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை கண்டால், மாவட்ட கலெக்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சல், 9944290306- 044-25952450 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர, குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்-1098, குழந்தைகள் நலக் குழுவின் வடக்கு மண்டலத் தலைவர் - 9840135503, தெற்கு மண்டலத் தலைவர் - 9840083620, மத்திய மண்டலத் தலைவர் - 9841889069 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com