ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
தமிழ் செல்வன்- பவானி
தமிழ் செல்வன்- பவானி
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 39). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தமிழ்செல்வன் மற்றும் உறவினர்கள் பவானி (27), அம்பிகா (55), அற்புதம் (46), ஆகியோர் காரில் கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

காரை தமிழ்செல்வன் ஓட்டி வந்தார். கார் ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது பழுதாகி நின்றது. தமிழ் செல்வன் காரை சாலை ஓரமாக நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்தார்.

பவானி காரில் இருந்து இறங்கி தமிழ்செல்வனுக்கு உதவியாக இருந்தார். அம்பிகாவும், அற்புதமும் காரிலேயே அமர்ந்து இருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி பழுதாகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வனும், பவானியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அம்பிகாவும், அற்புதமும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தமிழ்செல்வன், பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com