தூய்மை இந்தியா திட்டத்தால் வயிற்று போக்கு நோய் குறைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம் தகவல்

தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WHO #SwachhBharatMission
தூய்மை இந்தியா திட்டத்தால் வயிற்று போக்கு நோய் குறைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம் தகவல்
Published on

துய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு சுற்றுப்புற சூழல் மாசு பாட்டில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

இதனால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com