ஓ.பன்னீர்செல்வம்-11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. #SupremeCourt #OPanneerSelvam
ஓ.பன்னீர்செல்வம்-11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது
Published on

அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது.

அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com