அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் - சிவசேனா

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் - சிவசேனா
Published on

மும்பை:

பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, சமீப காலங்களில் பாஜகவை தீவிரமாக சாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாஜக மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டிவிடுவார்கள் என நம்பியதாகவும், ஆனால் ஒருவார்த்தை கூட தற்போது அதைப்பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ராமர் பாஜகவுக்கு நல்ல நாட்களை அளித்ததாகவும், ஆனால் இன்னும் ராமர் அயோத்தியில் இருந்து அன்னியமாகவே இருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என கூறும் பாஜக, அந்த வழக்கு எத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் கேட்கவில்லை என கூறியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விட்டதாகவும், ஒருவேளை ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com