ராதாபுரம் மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந்தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 69,500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்ககோரி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடை நவம்பர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தடை உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com