பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவில் புதிய ஒப்பந்தம்

பாகிஸ்தான் வந்துள்ள சவுதி அரேபியா முஹம்மது பின் சல்மான் அல் சவுத் முன்னிலையில் இன்று இரு நாடுகளுக்கு இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. #SaudiPakistandeals #20billionUSDdeals
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவில் புதிய ஒப்பந்தம்
Published on

இஸ்லமாபாத்:

சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார்.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் முன்னிலையில் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் இன்று 8  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பாகிஸ்தானில் குவாடர் துறைமுகத்தில் இயங்கிவரும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையை ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மேம்படுத்துவது உள்பட 2 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சவுதி இளவரசர் எங்கள் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் மிகவும் பிரியமான நாடாகும். எப்போதும்போல் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிட்டார். #SaudiPakistandeals #20billionUSDdeals 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com