பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் - சத்யநாராயணராவ்

பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்தார். #SathyanarayanaRao #Rajinikanth
நல உதவிகளை ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயணராவ் வழங்கிய போது எடுத்த படம்.
நல உதவிகளை ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்யநாராயணராவ் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணராவ், கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் 1,069 பேருக்கு வேட்டி, சட்டையும், பெண்களுக்கு சேலைகளும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் நலிவுற்ற பெண் ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. முடிவில் கெலமங்கலம் ஒன்றிய இணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com