அ.தி.மு.க.வுக்கு தினகரனை தலைமை ஏற்க சொல்வது வேடிக்கையாக உள்ளது: சசிகலா புஷ்பா எம்.பி.

அ.தி.மு.க.வுக்கு தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது என சசிகலா புஷ்பா எம்.பி. கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு தினகரனை தலைமை ஏற்க சொல்வது வேடிக்கையாக உள்ளது: சசிகலா புஷ்பா எம்.பி.
Published on

அவனியாபுரம்:

சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா புஷ்பா எம்.பி. இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை தருகின்றனர். அவர்கள் உண்மை தன்மையை அறிய வேண்டும். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை தக்க வைத்துக் கொள்ள சசிகலா வெளியில் இருந்த போது சின்னம்மா என்பதும், சிறையில் இருக்கும் போது தூக்கி எறிந்து பேசும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் சிரிக்கிறார்கள். மீதி உள்ள 4 வருட ஆட்சியிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச்சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com