ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை

ரூ.500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி.

இவர் கடந்த 2008-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்ககோரி மதுரபாக்கத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் திருஞான சம்மந்திடம் விண்ணப்ப மனு கொடுத்திருந்தார்.

அப்போது அவர் ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வீராசாமி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைபடி வீராசாமி லஞ்ச பணம் ரூ.500 மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்திடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் திருஞானசம்மந்தத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதி பிரியா வழக்கை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்துக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com