ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,824 ஆக உயர்ந்துள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இதில் 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 91 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,960 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் 232 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com