ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க வேண்டும்: திருமாவளவன் பேச்சு

சாதி, மத வேலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தனி கட்சியை ரஜினிகாந்த் தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கடலூரில் திருமாவளவன் பேசினார்.
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க வேண்டும்: திருமாவளவன் பேச்சு
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிட்ட சாதிய கட்சி அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்காக போராடும் கட்சி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

கடலூர் மாவட்டத்தில் சாதிய மோதல், கொலை, வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இதை மதவாதம், சாதி அரசியல் செய்பவர்கள் தான் எதிர்க்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார்கள். அவர்கள் தமிழகத்தை ஆளவில்லையா?

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். சாதி, மத வேலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தனி கட்சியை ரஜினிகாந்த் தொடங்கி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com