

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கடந்த 11-ம் தேதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை தலைமை ஆசிரியர் ருசி பார்க்க சென்றார். அப்போது உணவில் இறந்த பாம்புக் குட்டி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மாணவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என கூறி எச்சரித்தார். அத்துடன் உயர் அதிகாரிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தார். இதுபற்றி, உணவு சமையத்த ஊழியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மதிய உணவின் தரம் குறித்து முதலமைச்சரின் பறக்கும்படையினர், இன்று ஆய்வு செய்தனர். உன்சா கான், சந்திரவலி, அகைர்வத் மற்றும் திகாவோன் சாலையில் உள்ள பள்ளிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.