புதுச்சேரி சிறுமி படுகொலை கண்டித்து "பந்த்"- அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.
புதுச்சேரி சிறுமி படுகொலை கண்டித்து "பந்த்"- அதிமுக அறிவிப்பு
Published on

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com