

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-
சிறந்த நிர்வாகம், மனித வளம், மருத்துவம் உள்ளிட்ட 5 துறைகளில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் நிதி உள்ளிட்ட எந்தவித உதவியும் இல்லாமல் புதுச்சேரி 5 துறைகளில் முதலிடம் பிடித்துள்ளது. அரசுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பாராட்ட மனமில்லாதவராக கவர்னர் கிரண்பேடி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் கேசினோ இருப்பது குறித்து கிரண்பேடி கேள்வி எழுப்பாதது ஏன்? என்றும் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.