புதுவையில் உச்சபட்சமாக கொரோனாவுக்கு 10 பேர் பலி

புதுவையில் உச்சபட்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

புதுச்சேரி:

புதுவையில் நேற்று ஆயிரத்து 486 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 511 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 461, காரைக்காலில் 31, ஏனாமில் 13, மாகேவில் 6 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் தற்போது ஆயிரத்து 952, காரைக்காலில் 100, ஏனாமில் 62, மாகேயில்13 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 264, காரைக்காலில் 8, ஏனாமில் 3 பேர் என மொத்தம் 275 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 12 ஆயிரத்து 434 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 ஆயிரத்து 127 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 7 ஆயிரத்து 761 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2 ஆயிரத்து 167, காரைக்காலில் 129, ஏனாமில் 60 பேர் என 2 ஆயிரத்து 356 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 180 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவே ஒரேநாளில் அதிகபட்சமான இறப்பு எண்ணிக்கையாகம். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com