பண்ருட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

பண்ருட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பண்ருட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (32). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஓன்றில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான என்ஜினீயர் ரமேசுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com