முதியோர்களின் பராமரிப்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்படும்- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி மாவட்டத்தில் முதியோர்களின் பராமரிப்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை, மருத்துவ உதவிகள் தேவைப்படும் மூத்த குடிமக்களை பராமரித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. எனவே தங்களது பராமரிப்பாளர்களுக்கு பாஸ் பெற விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பதாரரின் போட்டா-2, விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, பராமரிப்பாளரின் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து கொண்டு ஊட்டியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணபிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com