

உத்தரபிரதேச மாநிலத்தில் காரின் சன்ரூப் வழியாக 2 இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது காரில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கந்த்வேதா கிராமத்தில் திருமண வரவேற்பு ஊர்வலத்திற்கு வந்த காரில் 2 இளைஞர்கள் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது காருக்குள்ளே ஒரு பட்டாசு வெடிக்க அதன்பின் அனைத்து பட்டாசுகளை காருக்குள்ளே அடுத்தடுத்து வெடிக்க துவங்கியது.
இதனால் காருக்குள் தீப்பிடித்தது. இதனையடுத்து காயமடைந்த 2 இளைஞர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#BreakingNews #सहारनपुर: फतेहपुर के गंदेवद में शादी समारोह के दौरान सनरूफ से आतिशबाजी कर रहे युवक की कार में लगी आग। यह घटना कैमरे में कैद हुई, वीडियो वायरल।#FireAccident #ViralVideo #WeddingMishap pic.twitter.com/gw3tGX6VG0