அரியானாவில் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு

நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றார்.
Savitri Jindal
Published on

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

நயாப் சிங் சைனி மீண்டும் அரியானா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. .

இந்நிலையில், அரியானா தேர்தலில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான சாவித்ரி ஜிண்டால், தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் இன்று பாஜகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சரும் அரியானா மாநில பாஜக. பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவின் பலம் 51 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. இதனையடுத்து அவர் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

பாஜகவில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்ற தேவேந்தர் கத்யான் கனார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அதேபோல் பாஜகவில் இருந்து விலகிய ராஜேஷ் ஜூன் பகதூர்கர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com