சட்டப்பிரிவு 370 மோசம் என்றால்... புதிய காஷ்மீர் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு பரூக் அப்துல்லா பதில்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார்.பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர்.
சட்டப்பிரிவு 370 மோசம் என்றால்... புதிய காஷ்மீர் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு பரூக் அப்துல்லா பதில்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார்.

அப்போது பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். தற்போது இன்று அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற்றுள்ளோம். மக்களுக்கு உண்மை தெரியும்... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஜம்மு-காஷ்மீர் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த பரூக் அப்துல்லா "சட்டப்பிரிவு 370 மோசமானது என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடைந்தது.

சட்டப்பிரிவு 370 இவ்வளவு மோசமாக இருந்தால், மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பேசியதை பிரதமர் மீண்டும் கேட்க விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோதுதான் குலாம் நபி ஆசாத் குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான வளர்ச்சி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.

தற்போாது சட்டப்பிரிவு மற்றும் வாரிசு அரசியல் பொறுப்பு என்றால், எப்படி வளர்ச்சி அடைந்தோம்? இது மக்களுடைய ஆட்சி. முதலமைச்சருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தேன். ஆகவே, வாரிசு ஆட்சி எங்கே இருக்கிறது?. வாரிசு ஆட்சி என்பதை நான் பொதுவாகவே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளேன். ஒவ்வொரு முறை பேசும்போதும், பிரதமர் மோடி இதன்மீது குறிப்பிட்ட தாக்குதலை வைக்கிறார்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com