

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிப்பட்ட உதவியாளராக (PA) உள்ளார்.
இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 32 லட்சம் ரூபாய் பணம் மற்று 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.
உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்ட நிலையில், ஹாரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.