தேர்தல் வெற்றிக்காக சந்திரபாபு நாயுடு தில்லுமுல்லு-ரோஜா

நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை.மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார்.
தேர்தல் வெற்றிக்காக சந்திரபாபு நாயுடு தில்லுமுல்லு-ரோஜா
Published on

திருப்பதி:

திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.எத்தனை சர்வே முடிவுகள் என்ன சொன்னாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வைத்தும், நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனவும் பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் இரவு 9 மணி வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

இதுபோன்ற நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை. சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற நினைக்கிறார்.

ஆனால் மக்கள் ஜெகன்மோகன் முதல் மந்திரியாக வேண்டும் என்ற உறுதியுடன் வாக்களித்துள்ளனர். யார் என்ன செய்தாலும் மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார். எனவே அவரே மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com