search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனி நாடு கோரிக்கை: இந்தியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? - பா.ஜ.க. கேள்வி
    X

    தனி நாடு கோரிக்கை: இந்தியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? - பா.ஜ.க. கேள்வி

    • நாடு பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
    • பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் இடைக்கால பட்ஜெட் குறித்துப் பேசினார். அப்போது, ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெறவேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும் என தெரிவித்தார்.

    அவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் அதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒரே நாடாக இருக்கிறோம். அப்படியே இருப்போம் என உறுதியுடன் கூறுகிறேன் என்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து தொடர்பாக பா.ஜ.க.வின் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

    டி.கே.சுரேஷ்குமாருக்கு இனியும் எம்.பி.யாக நீடிக்க தகுதி கிடையாது.

    ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் போது அவரது கட்சி எம்.பி. நாடு பிரிவினைப் பற்றி பேசுகிறார்.

    இந்த விவகாரத்தில் சோனியா மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டம்.

    அரசியல் சாசனத்தை நாங்கள் மீறுவதாக தினமும் எங்களை குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எம்.பி.யின் கருத்து குறித்து மவுனம் காக்கின்றனர்.

    அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த கருத்து குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காக்கின்றனர் என கூறினார்.

    Next Story
    ×