அராஜக அரசியலில் ஈடுபடுகிறார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சாடல்

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
ravishankar prasad, rahul gandhi
Published on

தலைநகர் டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி அராஜக அரசியலில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது என்றார் பா.ஜ.க. எம்.பி.

மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரி சிஜேபி தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.

ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள்மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.

ஆர்.ஏ.எப். படையினர் மாணவர்கள்மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவுசெய்யும்படி காவலர்களைக் கோரினார்.

ராகுல் காந்தி தர்ணா

ஆனால், காவலர்கள் எப்.ஐ.ஆர். பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தர்ணா குறித்து பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அராஜக அரசியலில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தற்போது ​​எவ்வித அனுமதியோ அல்லது முன் அறிவிப்போ இன்றி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையத்தில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் குறிப்பிடும் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே FIR பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் அவருக்குத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

சட்டத்தை மதிக்காத ராகுல் காந்தி

ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் எந்தச் சட்டத்தையும் மதிக்க விரும்பவில்லையா? 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டாலேயே அக்கட்சி தற்போது இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், குற்றம் சாட்டுகிறோம்.

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தற்போது செய்து வரும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com