நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து
விபத்து
Published on

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர் துவரவயலை சேர்ந்த பழனிச்சாமி (35). இவர்கள் இருவரும் பொம்மாடிமலையில் இருந்து நார்த்தாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நார்த்தாமலை கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த வழியாக நடந்து சென்ற ஜன்னத்பேகம் என்ற பெண் மீதும் கார் மோதியதில் அவரும் படுகாயமடைந்தார்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜன்னத்பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரின் உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கார் டிரைவர் கீழக்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேசனை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com