விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் பலி

விருத்தாசலம் அருகே காரில் பழுது பார்த்து கொண்டிருந்த மெக்கானிக் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் பலி
Published on

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த பரவளூரைச் சேர்ந்தவர் சீனுவாசன் (43). மெக்கானிக்கான இவர் பரவளூர் பஸ் நிறுத்தத்தில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர் தன்னுடைய கடையின் முன்பு காரில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சீனுவாசன் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு சிகிச்சைப்பனின்றி இறந்தார். 

புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com