

சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல் மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது.
முதல்-அமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக் கரத்தால் அடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். #DMK #MKStalin