சூலூர் கூலித் தொழிலாளியிடம் செல்போனில் உடல் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் கூலித் தொழிலாளியிடம் செல்போனில் உடல் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
Published on

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 19 -ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் வந்தார்.

அப்போது அவர் கிராம திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்தார். அதன் படி சூலூர் தொகுதி அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகருக்கு சென்றார்.

அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர் சர்க்கரை (63) என்பவரிடம் செல்போன் எண்ணை வாங்கி சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொழிலாளி சர்க்கரைக்கு போன் செய்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

உறவினர்கள் நலம் குறித்தும் கேட்டறிந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து அவரது கருத்தினை கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனால் கூலி தொழிலாளி சர்க்கரை மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் இதனை சொல்லி மகிழ்ந்தார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பநாயக்கன் பட்டி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com