காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining
காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

அரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com