

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அரசின் மதுவிலக்கு நடைமுறை குறித்து விளக்கம் அளித்தார்.