எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர்- கே.சி.கருப்பணன் பேட்டி

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்ந்தெடுப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன்
அமைச்சர் கே.சி.கருப்பணன்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் கே.சி. கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்ந்தெடுப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோயம்பேட்டை தவிர அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு குறைந்த அளவே உள்ளது.

பொது போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ள நிலையில் காற்றின் மாசு அளவு குறித்து இனிமேல் ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் நோய் தொற்று கண்டு பிடிக்கப்பட்டு பலரும் குணமடைந்து வருகிறார்கள். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் குறித்து தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முடிவை பொறுத்தே அரசு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து அ.தி.மு.க.வில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் கருப்பணன் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com