சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க உரிய விளக்கம் அளிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #SC #Jayakumar #3MLAs
சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க உரிய விளக்கம் அளிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
Published on

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு வழங்கி இருப்பது தீர்ப்பு அல்ல. இடைக்கால தடைதான். ஏற்கனவே இந்த மாதிரி பல வழக்குகளில் பல சந்தர்ப்பங்களில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த வரலாறு உண்டு.

3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர் 182 பக்கங்கள் கொண்ட விளக்கம் கேட்கும் நோட்டீசை அனுப்பி இருக்கிறார்.

உரிய விளக்கத்தை அளித்து இடைக்கால தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com