30,31 தேதிகளில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர்கள் அழைப்பு

பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு இரு அவைகளின் சபாநாயகர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். #LokSabha #SumitraMahajan #allpartymeeting
30,31 தேதிகளில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர்கள் அழைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

எனினும், வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #LokSabha #SumitraMahajan #allpartymeeting 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com