பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த மந்திரி பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இருந்து இந்திய தூதரக உயரதிகாரி வெளிநடப்பு செய்தார். #Indiaboycotts #Indiandiplomat #SAARCmeeting
பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு
Published on

சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும்.

அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக உயரதிகாரி சுபம் சிங் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியின் மந்திரி சவுத்ரி முஹம்மது சயீத் இந்த மாநாட்டு அரங்கத்தில் இருந்தார்.

அவரது வருகைக்கு இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மாநாட்டில் இருந்து சுபம் சிங் வெளிநடப்பு செய்தார்.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com