ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்- 10 கிராம மக்கள் பங்கேற்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வேளாங்கண்ணி முதல் வேட்டைக்காரனிருப்பு வரை 10 கிராம மக்கள் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்- 10 கிராம மக்கள் பங்கேற்பு
Published on

நாகப்பட்டினம்:

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ள மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசிற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் கிராம மக்களால் நடைபெற்ற போராட்டத்தில், கிராமத் தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கைகோர்த்து நின்று மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com